40 தியான பாடல்கள் - Day 3
ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே!
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களே!
அல்லேலூயா! அல்லேலூயா!
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை! அல்லலில்லை!
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
2. புதிய புதிய பாடல்களைப்
புனைந்தே பண்களும் சேருங்களே!
துதிகள் நிறையும் கானங்களால்
தொழுதே இறைவனைக் காணுங்களே!
3. நெஞ்சின் நாவின் நாதங்களே!
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
மேலும் பரவசம் நாடுங்களே!
4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே!
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
சீயோனில் கீதம் பாடுங்களே!
தியான வசனம்:
சங்கீதம் 96: 1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
Psalm 96: 1 ( NIV )
Sing to the Lord a new song; sing to the Lord, all the earth.
Psalm 96 is a hymn of praise that invites the entire world to recognize God’s sovereignty and celebrate His marvelous deeds.
It begins with a call to “sing to the Lord a new song,” emphasizing fresh, heartfelt worship rather than routine ritual,
and extends this invitation to all people and nations.
|